இதை தொடர்ந்து 1997ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மாநகரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம், கோயம்புத்தூர் மாநகரம், மதுரை மாநகரம், திருச்சிராப்பள்ளி மாநகரம், திருநெல்வேலி மாநகரம், மற்றும் திருப்பூர் மாநகரம் ஆகியவற்றின் சொல்களின் பொருள் வரையறைகளுக்கு தகுந்தவாறு திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில், காவல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.