வழக்கை விசாரித்த நீதிபதிகள் “இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடந்ததால் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும். குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது’ என்று கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், குஜராத் மாநில அரசின் மீதான விமர்சனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதில், தங்களுக்கு எதிரான பாதகமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.