பைக்குகள் மோதல் 3 பேர் பரிதாப பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் அருண்குமார் (16). பிளஸ் 2 படித்து வந்தார். மகள் வைஷ்ணவி (21). எம்ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அருண்குமார் தனது அக்கா வைஷ்ணவியை பல்கலைக்கழகத்திற்கு பைக்கில் அழைத்து சென்றார். வாணாபாடி- செட்டித்தாங்கல் சாலையில் தனியார் பேப்ரிகேஷன் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரே பைக்கில் சோளிங்கர் பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்த லாலாபேட்டை சரத்பாபு(28), கோபால்(45), பெல் ஆன்சிலரி மலைமேடு ஆனந்த்(25) ஆகியோர் மீது இவர்களது பைக் நேருக்குநேர் மோதியது. இதில், 5 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில், படுகாயம் அடைந்த தொழிலாளிகள் சரத்பாபு, கோபால் மற்றும் பள்ளி மாணவன் அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கல்லூரி மாணவி வைஷ்ணவி மற்றும் தொழிலாளி ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி