விழுப்புரம்: விழுப்புரம் அருகே நரையூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் திருப்பதி (21). தனியார் கல்லூரி மாணவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18). நேற்று முன்தினம் இரவு மடுகரையிலிருந்து சிறுவந்தாடுக்கு பைக்கில் சென்றனர். திருப்பதி பைக்கை ஓட்டினார். எதிரே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (60) என்பவர் ஓட்டி வந்த பைக்கும், இவர்களது பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் திருப்பதி, கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.