நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் கணபதியும், மதிவாணனும் நள்ளிரவு 12.30 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். பைக்கை மதிவாணன் ஓட்டினார். கணபதியை அவரது குடியிருப்பில் இறக்கி விடுவதற்காக மதிவாணன் சென்றுள்ளார். சத்தியமூர்த்தி நகர் அருகே கால்வாயை கடந்து மணலி சாலையில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி நிலை தடுமாறி மதிவாணன் ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, மதுரையை சேர்ந்த லாரி டிரைவர் ராஜியை (48), கைது செய்து விசாரித்து வருகின்றனர்.