பேருந்து மீது பைக் மோதி கூலி தொழிலாளர்கள் 2 பேர் பலி

மதுராந்தகம்: மதுராந்தகம் புறவழி சாலையில் அரசு பேருந்தின் மீது பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை (50), வேலு (45). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் நேற்று மதியம் மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரம் விற்கப்படும் மீன்களை வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதுராந்தகம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்