இந்த விபத்தில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன், பயணம் செய்த ரவியை சக வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த ரவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் பவித்ரன் (32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.