பைக் மீது கார் மோதியதில் இருவர் பலி

செங்கல்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர், பூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனது நண்பரான ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவி (48). இருவரும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது பல்லாவரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன், பயணம் செய்த ரவியை சக வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த ரவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் பவித்ரன் (32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு