பீகாரில் ரயிலில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்; 2 பேர் கைது

சமஸ்திபூர்: பீகாரின் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் இருந்த ரயிலுக்குள் குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து சமஸ்திபூர் கோட்ட ரயில்வே மேலாளர் வினய் ஸ்ரீவத்சவா கூறுகையில், “புதன்கிழமை பிற்பகல் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் வௌியே நின்றிருந்த பகல்பூர் தர்பங்கா இன்டர்சிட்டி விரைவு ரயிலில் குண்டு வெடித்தது. ரயில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர். விசாரணையில் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் மண்டேல், நவேந்து மண்டல் ஆகிய பயணிகள் வெடிமருந்துகளுடன் ரயில் பயணித்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி