பீகாரில் சோகம் புனித நீராடிய 37 குழந்தைகள் உள்பட 46 பேர் மூழ்கி பலி

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த புனித நீராட்டு விழாவில் 37 குழந்தைகள் உள்பட 46 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். பீகார் மாநிலத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ஜிவித்புத்ரிகா. இந்த பண்டிகை பீகார் மட்டுமல்லாமல் ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியை முன்னிட்டு இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவது வழக்கம். அவ்வாறு புனித நீராடியபோது பீகாரில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 3 பேர் காணாமல் போயுள்ளனர். பீகார் அரசு இதனை நேற்று உறுதிப்படுத்தியது. இதுவரை 15 மாவட்டங்களில் மொத்தம் 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 6 பேரை தேடும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Related posts

சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

அனைவருக்கும் முன்னேற்றத்தை அளிக்கும் மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு