முங்கர்: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள பொதுசெயலாளராக இருப்பவர் பங்கஜ் யாதவ். இவர் நேற்று முங்கர் மாவட்டம் சபியாபாத் பகுதியில் தன் வீட்டருகே நேற்று காலை நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கியால் சுட்டனர். மார்பில் குண்டு பாய்ந்த பங்கஜ் யாதவ் உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.