பீகார் சட்டமேலவைக்கு ராப்ரி தேவி போட்டி

பாட்னா: சட்டப்பேரவை மேலவை தேர்தலில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி போட்டியிடுவார் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் வௌியிட்ட அறிவிப்பில், “கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக், தேசிய பொது செயலாளர் சையத் பைசல் அலி மற்றும் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவர் ஊர்மிளா தாக்கூர் ஆகியோர் பீகார் சட்டப்பேரவை மேலவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் நாளை மறுதினம் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்