இந்நிலையில் லோக் ஜனசக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி தலைவரும், ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் முதல்வர் நிதிஷ் குமாரை அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது பீகாரில் தொடரும் பால விபத்துகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும் ரூபாலி பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினருக்கு தன் முழு ஆதரவை தருவதாக சிராக் பஸ்வான் உறுதி அளித்தார்.