டெல்லி: பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் கடந்த 2 வாரங்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழு அமைத்து பாலங்களை ஆய்வு செய்ய பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.