இது பீகார், ஆந்திரா பட்ஜெட்: திரிணாமுல் கடும் தாக்கு

ஒன்றிய நிதிநிலை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் தன் ட்விட்டர் பதிவில், “இது ஒன்றிய நிதிநிலை அறிக்கை என சொல்லக் கூடாது. இது பீகார், ஆந்திரா மாநிலங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பட்ஜெட். ஒருவரின் நாற்காலியை காப்பாற்றி கொள்ள சிலரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும் நிதிநிலை அறிக்கை.

மேற்குவங்கத்தை மோடி புறக்கணித்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜியின் முன்னோடியான, வெற்றிகரமான சில திட்டங்களை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. தேசத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண தவறி விட்ட நிதிநிலை அறிக்கையில், வெறும் புள்ளி விவரங்கள், சொல்லாட்சிகளே உள்ளன” என்று விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தேசிய தொடர்பாளர் அபிஷேக் பானர்ஜி, “ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கானஒதுக்கீட்டை திரிணாமுல் எதிர்க்கவில்லை. ஆனால் அதேசமயம், பாஜவுக்கு வாக்களிக்காதவர்கள் பற்றி சுவேந்து அதிகாரி அண்மையில் பேசியதை உறுதி செய்யும் விதமாக மேற்குவங்கத்தை பாஜ அரசு தொடர்ந்து புறக்கணித்து, வஞ்சித்து வருகிறது. இதற்கான பாடத்தை மேற்குவங்க மக்கள் தருவார்கள்” என்றார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை