இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்த நிலையில் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.