பாட்னா: பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே பீகாரில் 22 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களில் பீகாரில் 40 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.