சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

பெரம்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் (33), சூலூர்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுப்பில் சொந்த ஊருக்கு சென்ற இவர், தனது நிறுவனத்தில் வேலை செய்ய 11 பேரை அழைத்துக் கொண்டு கடந்த 28ம் தேதி இரவு, பீகார் மாநிலத்தில் இருந்து விரைவு ரயிலில் சென்னை புறப்பட்டார்.

நேற்று காலை 10 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த அர்ஜூன் உள்ள 12 பேரும், அங்கிருந்து ஆட்டோவில் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல முயன்றனர். அப்போது, 3 ஆட்டோ டிரைவர்கள் இவர்களை சவாரி அழைத்து செல்வது போல் நடித்து, ஜமாலயா பகுதியில் உள்ள செங்கை சிவம் மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி, கத்தி முனையில் அர்ஜூன் வைத்திருந்த 7500 ரூபாயை பறித்துள்ளனர்.

அப்போது, ஓட்டேரி உதவி ஆய்வாளர் சண்முகம் அவ்வழியாக ரோந்து சென்றதால், அவரை பார்த்து வடமாநில தொழிலாளர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதனால், 2 ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து தப்பினர். ஒரு ஆட்டோ டிரைவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பெரம்பூர் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த மதன்குமார் (45) என்பதும், இவருடன் வந்தவர்கள் துரை மற்றும் கார்த்திக் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மதன்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பிய துரை மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்