பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!

பீகார்: பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், முசாஃபர்பூர் பகுதியில் வெள்ளத்தில் இறங்கியது. வெள்ளத்தில் சிக்கியோருக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் கீழே இறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் 2 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கிய நிலையிலும் அதில் இருந்த பொருட்களை மக்கள் படகு மூலம் அள்ளிச் சென்றனர்.

Related posts

தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர்

ஐசிசியின் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தல்!

பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்