டெல்லி: 9வது முறையாக பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் பிகார் முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகார் விவகாரம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நகர்வு குறித்து காங்., பாஜக மற்றும் ஆர்.ஜே.டி கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிகாரில் 22 ஐஏஎஸ், 79 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.