இதனால் இரு நாடுகளின் உறவு மேலும் மோசமடைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிகளின் தேர்தல் பிரசார குழுக்களை ஈரானைச் சேர்ந்த ஹேக்கர்கள் ஹேக் செய்ததாகவும், இந்த சைபர் தாக்குதலில் அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான ஈரானின் நேரடி தலையீடு என்றும் அமெரிக்க உளவுத்துறையான எப்பிஐ கடந்த வாரம் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், பிரசார குழுக்களை மட்டுமின்றி, தற்போதைய அதிபர் பைடன் ஆட்சியிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியிலும் கூட அமெரிக்காவின் உயர் அதிகாரிகளின் வாட்ஸ் அப் கணக்குகளை அதே ஈரானிய ஹேக்கர்கள் குழு குறிவைக்க முயற்சித்ததாக மெட்டா நிறுவனம் பரபரப்பு தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் சந்தேகத்திற்கு இடமான தகவல்களை பெற்ற அதிகாரிகள் புகார் செய்ததன் மூலம், ஹேக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் முயற்சியை தோல்வி அடையச் செய்ததாக மெட்டா தெரிவித்துள்ளது.