சைக்கிள் பந்தய வீரர்களுக்கு அதிநவீன மிதிவண்டிகள் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர்களுக்கு அதிநவீன மிதிவண்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.83.33 லட்சத்தில் 5 அதிநவீன மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. சைக்கிள் பந்தய வீரர்கள் சஞ்சய் சரவணன், கிஷோர், ஸ்மிருதி, கஸ்தூரி, ஹாசினி ஆகியோருக்கு மிதிவண்டிகள் வழங்கினார். சைக்கிள் பந்தயத்தில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகள் வெற்றிக்கு துணை நிற்போம். சைக்கிள் பந்தயத்தில் எண்ணற்ற சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துகள் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

 

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்