அகமதாபாத்: பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக இரவு கரையை கடக்க உள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கி நள்ளிரவு 11.30 மணி வரை பிபோர்ஜாய் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜக்காவு துறைமுகத்துக்கு 140 கி.மீ மேற்கு – தென்மேற்கில் மிக தீவிர புயல் பிபோர்ஜாய் மையம் கொண்டுள்ளது.