கணவர் செல்வகுமார் சிதம்பரம் பெரியார் டெப்போவில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து மாதங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினாலும் தினந்தோறும் மது குடித்துவிட்டு செல்வகுமார் தனது திருமணத்திற்கு ஏற்பட்ட கடனை அடைக்க தனது மனைவியிடம் ரூபாய் 5 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு தந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனால் மணமுடைந்த சூர்யா, வீட்டு பெட்ரூம் ஜன்னலில் துப்பட்டாவினால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்த சூர்யா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு சிதம்பரம் ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.