மேட்டுபாளையம், சிறுமுகையில் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம், 97 அடியை தாண்டியது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.