சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே’ ‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!’ எனக் கனல் தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.