சென்னை: தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு பாடகி பவதாரிணியின் உடல் கொண்டு வரப்பட்டது. இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். தி.நகரில் பவதாரிணி உடலுக்கு பிரபலங்கள், திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.