பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு 55 அடியாக இருந்த நிலையில் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7994 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 66.14 அடியாகவும், நீர் இருப்பு 9.4 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.