ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து நாளை முதல் முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களில் உள்ள பாசன நிலங்களுக்காக தண்ணீர் திறக்க நீர்வளத்துறை ஆணையிட்டுள்ளது. நாளை முதல் நவ.8-ம் தேதி வரை 8,812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் திறப்பின் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானியில் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.