Monday, October 7, 2024
Home » ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.. இபிஎஸ் மறக்கக் கூடாது :திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர்.. இபிஎஸ் மறக்கக் கூடாது :திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

by Porselvi

சென்னை : சென்னையில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் கடும் வெயிலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,”வான்சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் பலியான விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.5 பேர் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான அறிக்கையே இன்னும் வரவில்லை.

ஜெயலலிதா தூங்கியதால் அதிமுக ஆட்சியில் 2015-ல் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது.கும்பகோணம் மகாமகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்களே. ஜெயலலிதா பங்கேற்றபோது நிகழ்ந்த இறப்புகளை இபிஎஸ் மறக்கக் கூடாது; ஜெயலலிதாவின் மதுரை தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டத்தில் சிக்கி 6 பேர் இறந்தனர். சென்னையில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வது சரியல்ல. மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தரப்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

seventeen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi