இதுகுறித்து விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாத், “பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தாதது, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பிப்ரவரி 16ம் தேதி விவசாயிகள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு வணிகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.