பிப்.16 பாரத் பந்த்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

நொய்டா: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 16ம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாத், “பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அமல்படுத்தாதது, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பிப்ரவரி 16ம் தேதி விவசாயிகள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு வணிகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்