நாங்கள் யாருக்கும் துரோகம் பண்ணல…சொல்கிறார் அன்புமணி

கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து நேற்று கடலூரில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தில் யாராக இருந்தாலும் நாகரிகமாக பேச வேண்டும். எங்கள் கட்சித் தொண்டர்களை டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் நோக்கத்தில் கொண்டு செல்கிறோம்.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, துரோகம் செய்துவிட்டதாக சொல்லி வருகிறார். நாம் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். நாங்கள் மற்றவர்களை வாழ வைப்போம். துரோகம் என்றால் எங்களுக்கு தெரியாது. ஒவ்வொரு முறையும் உங்களின் கட்சிக்கு உயிர் கொடுத்தோம். எங்கள் கட்சியை நாங்கள், உங்களுக்கு தாரை வார்ப்பதற்கு கொடுத்துள்ளோமா?.

அதிமுக தொண்டர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், உங்களுடைய வாக்குகளை வீணடிக்காதீர்கள். உங்களது வாக்குகளை எங்களுக்கு போடுங்கள். உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆகப்போவதில்லை. பிரதமரும் ஆகப்போவதில்லை. உங்களுடன் தேசிய கட்சி எதுவும் இல்லை. ஏதோ இருக்கிறீர்கள் அவ்வளவுதான்’ என்றார்.

 

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!