அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, துரோகம் செய்துவிட்டதாக சொல்லி வருகிறார். நாம் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். நாங்கள் மற்றவர்களை வாழ வைப்போம். துரோகம் என்றால் எங்களுக்கு தெரியாது. ஒவ்வொரு முறையும் உங்களின் கட்சிக்கு உயிர் கொடுத்தோம். எங்கள் கட்சியை நாங்கள், உங்களுக்கு தாரை வார்ப்பதற்கு கொடுத்துள்ளோமா?.
அதிமுக தொண்டர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், உங்களுடைய வாக்குகளை வீணடிக்காதீர்கள். உங்களது வாக்குகளை எங்களுக்கு போடுங்கள். உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆகப்போவதில்லை. பிரதமரும் ஆகப்போவதில்லை. உங்களுடன் தேசிய கட்சி எதுவும் இல்லை. ஏதோ இருக்கிறீர்கள் அவ்வளவுதான்’ என்றார்.