நிகழ்ச்சியில் ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பேசுகையில், ஐ.ஐ.டி. சேர்க்கையில் கடந்த ஆண்டு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இடஒதுக்கீட்டின் மூலம் 5 சாம்பியன்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்தனர். அதுபோல வரும் கல்வியாண்டில் இருந்து கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான இடஒதுக்கீடும் அறிமுகம் செய்யப்படும். எனவே மாணவர்கள் கலைத் துறையிலும் நன்கு ஆர்வம் காட்டி, அதன் மூலமாகவும் ஐ.ஐ.டி.யில் நுழைய முடியும் என்றார்.