கலையில் சிறந்தவர்களுக்கு ஐ.ஐ.டி சேர்க்கையில் இடஒதுக்கீடு: இயக்குனர் காமகோடி தகவல்

சென்னை: கலைத்துறையில் சிறந்து விளங்குவோர்க்கு ஐ.ஐ.டி சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என இயக்குனர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.எஸ் பள்ளியில் தஞ்சை அனிருத் தேவா என்ற சிறுவனின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சீனிவாசன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி பேசுகையில், ஐ.ஐ.டி. சேர்க்கையில் கடந்த ஆண்டு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இடஒதுக்கீட்டின் மூலம் 5 சாம்பியன்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்தனர். அதுபோல வரும் கல்வியாண்டில் இருந்து கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான இடஒதுக்கீடும் அறிமுகம் செய்யப்படும். எனவே மாணவர்கள் கலைத் துறையிலும் நன்கு ஆர்வம் காட்டி, அதன் மூலமாகவும் ஐ.ஐ.டி.யில் நுழைய முடியும் என்றார்.

Related posts

மக்கள் பணி, கட்சிப்பணியில் கவனம் செலுத்துவோம் என்னை சந்திக்க சென்னைக்கு வருவதை திமுகவினர் தவிர்க்கவும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று தேசிய தன்னார்வ ரத்ததான தினம்; ரத்ததானம் செய்பவர்களை உளமார பாராட்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு 14ம் தேதி முதல் தொடங்குகிறது