தி.நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 24 தபால் அலுவலகங்களில் இந்த குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சம்பந்தபட்ட பென்சன்தாரர்கள் ஏதேனும் புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும் மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) மற்றும் வாட்ஸ் அப் (9444251587) மூலமாகவும் 26ம் தேதிக்குள் அனுப்பலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது.