இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஹரிபிரசாத் ஆஜரானார். காவல்துறை சார்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் தர முடியாது. தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தனக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் முன் கூட்டியே காவல்துறைக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் என்று தெரிவித்து விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.