பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம் ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு வழக்கு ரத்து

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசினார்.இது தொடர்பாக திமுக சார்பில் அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பில், பெங்களூரு கபே குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை தமிழக மக்கள் சார்பாக அரசு ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதை ஏற்ற நீதிபதி, ஒன்றிய இணையமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை