இது குறித்து போலீசார் கூறுகையில், சமுதாயத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக சமூக விரோதிகள் இவ்விதம் நடந்து கொண்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.
இதற்கிடையே திருவள்ளுவர் சிலையை சுத்தப்படுத்தி மலர் மாலை அணிவித்து தமிழ் ஆர்வலர்கள் வணங்கினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், திருவள்ளுவர் தமிழர்களின் அடையாளம். சில விஷமிகள் இவ்விதம் நடந்து கொள்வதன் மூலமாக சமூகத்தில் கலவரம் ஏற்படுத்த முயன்றுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும், என்றனர்.