இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், எந்த உள்நோக்கமும் இல்லாமல் வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவிலும் இது சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் தனது கருத்துக்கு எக்ஸ் தளத்தில் மன்னிப்பும் கோரியுள்ளார் என்று கூறப்பட்டது. அதற்கு, காவல்துறை தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மன்னிப்பு கோரும் விவகாரம் தொடர்பாக அரசின் கருத்தை அறிய வேண்டும் என தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, இதுபோன்ற வழக்கில் பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல செந்தியாளர் சந்திப்பை நடத்தி மனுதாரர் மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.