Tuesday, September 10, 2024
Home » பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழகளை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோர வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழகளை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோர வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

by MuthuKumar

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்புக்கு தமிழர்களே காரணம் என ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு கோரினார் ஏற்றுகொள்ளப்படுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கேட்டால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார்.

ஒன்றிய அமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்புக்கு பதில், மன்னிப்புகோரி பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி செய்தியாளர் சந்திப்பின்போது அவதூறு ஒரு கருத்து தெரிவித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் தான் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதற்க்குள் ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரி அது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi