பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் மூத்த தலைவரான சங்கரய்யா இறப்பு தமிழக அரசியலுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய பேரிழப்பு. அவர் வாழ்க்கையையே கம்யூனிஸ்ட் கட்சியோடு ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தார். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மறைந்த சங்கரய்யாவுக்கு, நிச்சயமாக மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அவர் மிகப்பெரிய ஒரு தலைவர். தமிழகத்தினுடைய ஒரு மிகப்பெரிய ஆளுமை.
அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டால் தமிழக மக்கள் அனைவரும் சந்தோஷப்படுவார்கள். விருதுகள் அனைத்திற்கும் சில நடைமுறைகள் உள்ளன. பாரத ரத்னா விருது குறித்து அவரது குடும்பத்தினர் முன்னெடுப்புகள் செய்யும்போது அவர்களுடன் இருந்து முன்னெடுப்புகளை செய்வோம். அவருடைய சேவையை பாராட்டுவதற்கும், சேவையை போற்றுவதற்கும் நிச்சயமாக நாம் அவரை போற்ற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.