அறுவை சிகிச்சை முடிந்து, வீடு திரும்பிய பிறகு, நேரில் சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோவுக்கு இன்று நடக்க இருப்பது சிறிய அறுவை சிகிச்சைதான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. மருத்துவர்கள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவருக்கு எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.
எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ் இப்போது நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார். எனவே அவரைப் பற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் பூரண நலம் பெற்று வைகோ இல்லம் திரும்புவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.