இதனைத்தொடர்ந்து, 12 மணி அளவில் தீ குண்டத்தில் பழுக்க காய்ச்சப்பட்ட இரும்பு பட்டயத்தில் பக்தர் ஒருவர் கையால் அடித்து மழுவடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் ஊஞ்சல் சேவையும், 8 மணி அளவில் எல்லையம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தமிழரசி, ஒன்றிய குழு உறுப்பினர் பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர் சாவித்திரி சங்கர், துணை தலைவர் மல்லிகா மணி, ஆலய அர்ச்சகர்கள் திருமலை ஐயர், ஹரி ஐயர் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.