சென்னை: பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 10ல் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ. 1000 தொகை, பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.