வெளிநாட்டு பயணிகள் வரும் இடங்களில் உள்ள கேரள ஓட்டல்களில் பீர், ஒயின் விற்க அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இடங்களிலுள்ள ஓட்டல்களில் சீசன் சமயங்களில் பீர், ஒயின் விற்க அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் புதிய மதுக் கொள்கைக்கு நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ் கூறியது: புதிய மதுக் கொள்கையின்படி கள் விற்பனையை ஊக்குவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேரளா கள் என்ற பெயரில் புதிய கள் வகை அறிமுகம் செய்யப்படும். கேரளாவிலுள்ள அனைத்து கள்ளுக் கடைகளும் நவீனப்படுத்தப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடங்களிலுள்ள ஓட்டல்களில் சீசன் சமயங்களில் பீர், ஒயின் விற்க சிறப்பு லைசென்ஸ் வழங்கப்படும்.கேரளாவில் கிடைக்கும் பழ வகைகளில் இருந்து குறைவான போதையுடன் கூடிய மது, ஒயின் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

வீராணம் ஏரி தூர்வாரப்படுமா? அமைச்சர் விளக்கம்

நீர்வளத்துறைக்கு புதிய இலச்சினை: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 7,412 பேர் புதிதாக பணி நியமனம்: அமைச்சர் தகவல்