இந்நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மோனொ ஆக்டிங் நாடகம், பாடல் இடம் பெற்றது. மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்புக்குழு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசுகையில், ‘தங்களுடைய பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதை வஸ்துகள் விற்பனை செய்வது குறித்தும், சக மாணவனை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்றவும் தகவல் தரும் மாணவர்களின் அடையாளங்கள் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்படும்.
எனவே தங்களுடைய பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவை வழிநடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், போதை பொருள் விற்பனையை தடுக்கவும், தொடர்ந்து முயற்சி எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் ஒரு பரிசு வழங்கப்படும். அது மாவட்ட கலெக்டரின் இருக்கை ஒருநாள் முழுவதும் அவர்களுக்கு வழங்கப்படும். அந்த ஒருநாளில் மாவட்ட கலெக்டராகிய நானும், ஒருநாள் கலெக்டராக அமரும் அந்த மாணவருக்கு கட்டுப்படுவேன். அவருடைய சொல்லுக்கு கட்டுப்படுவேன் என்று கூறினார்.