Thursday, June 27, 2024
Home » கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்லத் தடை விதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்லத் தடை விதிப்பு

by Francis

குமரி: கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கடற்கரைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்களும் கடலோரங்களில் வசிப்போரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல தவிர்க்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

fourteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi