கியோஞ்சர், சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், சம்பல்பூர், சோனேபூர், பர்கர், ஜார்சுகுடா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மயூர்பஞ்ச், ஜாஜ்பூர், தேன்கனல், கட்டாக், கந்தமால், கலஹண்டி, போலங்கிர், நுவாபாடா, நாயகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் கோடைக் காலத்தில் வாட்டி வதைத்த வெப்ப அலை முடிவுக்கு வந்து நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிந்துள்ளது.