இந்த கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி தலைமையி;லான ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மீ கட்சி INDIA கூட்டணியில் உள்ளது. ஆம் ஆத்மீ கட்சிக்கும் பாஜகவிற்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை,சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தன்னை கைது செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில், பாவனா மைதானத்தில் விவசாயிகளை சிறை வைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், “விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் அரசியல் சாசன உரிமை. எனவே விவசாயிகளை கைது செய்வது தவறானது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும்,”என்று ஒன்றிய அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.