குளித்தலை வக்கீல் சங்க ஆண்டு விழா

 

குளித்தலை, ஏப். 29: கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல் சங்க ஆண்டு விழா மற்றும் பணி மாறுதல் ஆகி செல்லும் நீதிபதிக்கு பாராட்டு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சார்பு நீதிபதி சமுத்திரக்கனி வாழ்த்துரை வழங்கினார்.

குளித்தலை நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த தினேஷ் குமார் பணி மாறுதல் ஆகி வேதாரண்யம் நீதிமன்ற குற்றவியல் உரிமைகள் நீதிமன்றத்தில் மாறுதலாகி சென்றதால் அவர்களுக்கு வக்கீல் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மூத்த வக்கீல்கள் பாலன், சுந்தரமூர்த்தி, அரசு வக்கீல் நீலமேகம், துணைத் தலைவர் முருகேசன், இணை செயலாளர் சரவணன், துணைத் தலைவர் சுதா மற்றும் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தமிழரசன் நன்றி கூறினார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து