குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். உத்திரமேரூர் அருகே விசூர் வடகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (53). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் துரைசாமி என்பவரின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காகச் சென்ற அவர், உடைகளை கரையில் வைத்து விட்டு கிணற்றுக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் ஆகியும் சேட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து பெருநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கிணற்றில் இருந்து சேட்டுவை சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அதிமுக பேனரில் மின்சாரம் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம்

கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை: கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்..!!