கோவை: பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை கடத்தி பணம் பறித்த வழக்கை நவம்பர் 4க்கு சிபிஐ சிறப்பு கோர்ட் ஒத்திவைத்தது. ஐ.ஜி. பிரமோத்குமார் சரண் அடைந்ததை ஏற்ற கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 4ல் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஐ.ஜி. பிரமோத்குமார் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் சிபிஐக்கு ஆணையிடப்பட்டது. வரும் 31ம் தேதிக்குள் சிபிஐ பதிலளிக்க கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.